கொழும்பு நகர எல்லையில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த வாரத்திற்கு மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலைகளுக்கு இணைய வழி கல்விக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
