கொழும்பைச் சேர்ந்த தாய், மகன் உள்ளிட்ட மூவர் படகு மூலம் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த ஜெசிந்தா மேரி, அவரது 10 வயதுடைய மகன் மற்றும் மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த அனிஸ்டன் உள்ளிட்ட மூவரே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
குறித்த மூவரும் மன்னார் – பேசாலை கடற்கரையில் இருந்து நேற்றிரவு படகொன்றில் சென்று இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள கோதண்டராமர் கடற்கரைப் பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த மண்டபம் கடலோரக் காவல் படையினர் மூவரையும் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

