மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீது பேசாலை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்திய நிலையில் 7 மீனவர்கள் பலத்த காயங்களுடன் பேசாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக தெரிய வருகையில்,
மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் கடற்படையினர் மத்தியில் அனுமதிப்பத்திரம் பரிசோதிக்கும் இடத்தில் ஏற்பட்ட சிறிய வாய்த்தர்கம் காரணமாக அப்பகுதியில் வியாழக்கிழமை(02) காலை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் இணைந்து குறித்த பிரச்சினையை சமரசப்படுத்திய நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு சென்றுள்ளனர்.

