கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஆகிய இரண்டிலும் மக்களால் வழங்கப்பட்ட ஆணை தோல்வியடைந்துள்ளதால், விரைவில் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகத்துக்காக தேர்தல் நடத்தப்பட்டால், செலவு செய்வதற்கு நிறுவனங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அவர் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்றவை அதற்கு உதாரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலை நடத்த 1200 கோடி ரூபாய்களே செலவாகும் இத்தொகையை 600 கோடிகளாக சுருக்கி தேர்தலை நடத்தவும் முடியும் என தெரிவித்துள்ள அவர் எந்தவொரு கொடுப்பனவும் பெறாமல் தேர்தல் கடமையை செய்யத் தயார் என அரச அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
