ஊடகவியலாளர்களுக்கு ஆர்ப்பாட்டங்களை கண்காணிப்பதற்கு உரிமை உண்டு – ஹனா சிங்கர்

ஊடகவியலாளர்களுக்கு ஆர்ப்பாட்டங்களை கண்காணிப்பதற்கு உரிமை உண்டு – ஹனா சிங்கர் தெரிவிப்பு.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுவதற்காக அதிகாரத்தினை பயன்படுத்தியமையானது மிகுந்த கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Hanaa singer தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Hanaa singer தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினருக்கும் ஆர்ப்பாட்டங்களை  கண்காணிப்பதற்கான  உரிமை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினரின்  செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்தப்படக்கூடாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Hanaa singer தெரிவித்துள்ளார்.  
புதியது பழையவை