தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டைவிட்டு வெளியேறி தற்போது மாலைதீவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் சர்வதேச நியாயாதிக்கத்தின் (universal jurisdiction) அடிப்படையில் இனப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டு தூதரகங்கள் முன்னால் போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோட்டாபய மாலைத்தீவு சொகுசு விடுதியில் செலவிட்டுள்ள பெருந்தொகை பணம்!
தமிழர் அமைப்புகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
'ஓட ஓட விரட்டுவோம்....நீதியின் முன் நிறுத்துவோம்....!' என்ற முழக்கத்துடன் ஏற்பாடாகி வரும் இப்போராட்டத்தில் அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒருங்கிணையுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கோரியுள்ளது.
போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
