வவுனியா - செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் ஒருவரைகாணவில்லை என பூவரசங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசித்து வந்த இராசேந்திரன் கிருபன் என்ற மாணவனே காணாமல் போயுள்ளார்.
இவரை கடந்த 16ஆம் திகதி அதிகாலை முதல் காணவில்லை என அவரது தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 திகதி அதிகாலை 1 மணியளவில் நித்திரையால் எழுந்து தண்ணீர் அருந்தியதாகவும், அதுவரை வீட்டில் இருந்ததனை அவதானித்ததாகவும், 16 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் காணாமல் போயுள்ளதாகவும் தாயார் பூவரசங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
குறித்த மாணவன் வகுப்பிற்கு செல்லாததால் அவரை தயார் 15ஆம் திகதி கண்டித்திருந்த நிலையில் அதனாலேயே குறித்த மாணவன் காணாமல் போயிருப்பார் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும் இவ் விடயம் தொடர்பாக பூவரசங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

