போரதீவுப்பற்று பிரதேசத்தில் - கறவைப் பசு தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று  வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை- தும்பாலை கிராமஉத்தியோகஸ்தர் பிரிவில்  இன்று (21-08-2022)ஞாயிற்றுக்கிழமை காலை கறவைப் பசு தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுதாவளை -04 சேர்ந்த 69 வயதுடைய நாகமணி பாக்கியராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வழமைப்போன்று கன்று ஈன்று 15 நாட்களான பசுமாட்டில் பால் கறந்து கொண்டிருக்கும் போது மாடு திடீரென நெஞ்சுப் பகுதியில் தாக்கியதில் குறித்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், களுவாஞ்சிகுடி நீதிமன்ற பதில் நீதிவானின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை