கல்முனையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி மட்டு கல்முனை பிரதான வீதியால் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று மட்டு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்த போது விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனையிலிருந்து 5 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதியின் தூக்க கலக்கத்தினாலே இவ் விபத்து சம்பவித்திருக்கிறது.
இவ் முச்சக்கர வண்டி கிரான்குளம் புதுக்குடியிருப்பை அண்மித்த பகுதியால் பயணிக்கும் போதே வீதியை விட்டு விலகி மின்சார தூணுடன் மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

