மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் சாஜன் கிட்னண் குலேந்திரனால் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்த பால தலைமையில் குறித்த பணப்பை உரியவரிடம் நேற்று(04) ஒப்படைக்கப்பட்டதுடன், உயர் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பாராட்டியுள்ளனர்.


