சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு

நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலைக்கு மத்தியிலும் சற்று முன்னர் நாடாளுமன்றம் கூடியுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (01) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ள நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நாளை (02) நடைபெறும்.

12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக பெறுமதிசேர் வரி (VAT)

இதேவேளை, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதிசேர் வரி (VAT) 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் போதே பெறுமதிசேர் வரியை (VAT)  அதிகரிக்க அதிபர் முன்மொழிந்துள்ளார்.

இதன்படி வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் என்ற வகையில் கையொப்பமிட்டுள்ளார்.
புதியது பழையவை