சுகாதார துறையினர் விடுத்த எச்சரிக்கை

நாளாந்தம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

இந்தநிலையில்  நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 700 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை பொதுமக்கள்  ஒன்று கூடுவதை தவிர்த்த  செயற்படுமாறும்   முகக்கவசம் அணிந்து செயற்படுமாறும்  சுகாதார அமைச்சு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து  செயற்படவில்லையாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை