ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தமது விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்வதன் காரணமாக மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்காததன் காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாதாந்தம் இருபத்தைந்து முதல் முப்பது வரையிலான விமானங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையானது மேலதிக பயணம் எனவும், விமானத்தின் தேய்மானம் நீண்ட கால அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.