கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று அக்குறணை நகரில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பாதசாரிகள் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த 70 வயதுடைய பாதசாரி ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேன் திடீரென வீதியின் வலது பக்கம் நகர்ந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போக்குவரத்து அடையாளத்துடன் மோதியது.
தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சாரதி உறங்கியமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை அலவத்துகொட பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.