பதுளையில் பெண்கள் இருவர் படுகொலை – மற்றுமொரு பெண் படுகாயம்

பதுளை – ஹிங்குருகம கெலபீன் தோட்டத்தில் இன்று காலை, தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர் குடியிருப்பு வீடொன்றில் வசித்து வந்த 83 வயதுடைய தாயும், அவரது 55 வயதுடைய மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

62 வயதுடைய மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை