நாட்டில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மணித்தியாலத்திற்கு 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது
மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது