கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல்

கிளிநொச்சி  பளைப்பகுதியில்  உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம்  கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் நேற்று அதிகாலை  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது

அதிகாலை வேளை நல்ல  உறக்கத்தில் இருந்த கணவன் மீதே மனைவி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலையடுத்து கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மனைவி மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகித்து அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாக  கூறப்படுகின்றது.
புதியது பழையவை