மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

பேராதனை - தவுலகல பிரதேசத்தில் மதில் இடிந்து விழுந்ததில் நபரொருவர் பலியாகியுள்ளார். 

சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் தவுலகல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
புதியது பழையவை