காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை அரலங்கவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தமின்ன சந்தி பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிம்புரத்தேவ பிரதேசத்தை சேர்ந்த 65 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கானவரை அரலங்கவில வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்கா அரலங்கவில வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை