ஜனாதிபதி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே  ஆகியோருக்கிடையில்  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது  உடன்பாடு எட்டப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தற்போது காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான  மீளாய்வு செய்யப்பட்டு, அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதற்கு  உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
புதியது பழையவை