முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்குட்பட்ட முத்தையன்கட்டுப் பகுதியில் வயல் உழவுக்காக உழவு இயந்திரத்தை செலுத்திக்கொண்டிருந்த போது உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முத்தையன் கட்டு எல் வி சந்திப்பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது காயமடைந்த சாரதி மக்களால் மீட்கப்பட்டு ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
பெரியசாமி ராஜ்குமார் (32 வயது)என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணையை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.