பெரும்போகத்துக்கான யூரியா உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும்

இலங்கையில் பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணி இன்று(01-10-2022) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் வரி மூலம் பெறப்படும் யூரியா உர இருப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன தெரிவித்தார்.

முதல் கட்டமாக ஒரு விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ யூரியா உரம் வழங்கப்படும் என கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகல், அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கே உரம் முதலில் விநியோகிக்கப்படவுள்ளன.
புதியது பழையவை