![](https://lh3.googleusercontent.com/-ppOu7FbtV9o/YzxE3w8GlII/AAAAAAAAwBM/Gq1CQryOWMI505x25qgx-ZkRj74InQ-6gCNcBGAsYHQ/s1600/Photo_1664893761467.jpg)
சிறுவர்களின் உடல், உள மேம்பாட்டை கருத்தில்கொண்டு அவர்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டியின் பாவனையினை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபை கௌரவ முதல்வர் திரு.தி.சரவணபவன் அவர்களின் தலைமையில் கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தருகில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்களான திரு. எம். நிஷ்கானந்தராஜா, திரு. சிவம் பாக்கியநாதன், முகமட் லத்தீப், திரு. எஸ். ஜெயந்திரகுமார், திரு. து. மதன் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் திரு. க.ஹரிகரராஜ், யுனிசெப் மற்றும் செரி நிறுவனங்களின் அதிகாரிகள், மாணவர்கள் என பல தரப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரத்தருகில் ஆரம்பமான சைக்கிள் பவனி சைக்கிள் பயணத்திற்காக ஒதுக்கப்பட்ட வீதியின் பகுதி ஊடாக மட்டக்களப்பு வெபர் மைதானம் வரையில் வருகைதந்ததுடன், தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மாணவர்களின் அதிகரித்துச் செல்லும் உடற்பருமனை கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு நோக்கினைக் கொண்டு இந்த திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் இதன்போது கருத்து தெரிவித்தார்.