மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

மட்டக்களப்பு - கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல், கோரவெளி காட்டுப்பகுதியில் T56 ரக தானியங்கி தாக்குதல் துப்பாக்கி மற்றும் 08 ரவைகள் என்பன நேற்று மீட்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மட்டக்களப்பு இராணுவப்புலனாய்வுப் பிரிவினர் களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே ரவைகள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை