குறைக்கப்பட்ட மின்வெட்டு நேரம் - வெளியான அறிவிப்பு

நாட்டில் இன்று(30-10-2022) ஞாயிற்றுக்கிழமைக்கான  மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 1 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்பட்ட நிலையில், கடந்த நாட்களில் 2 மணித்தியாலங்களாக மின்வெட்டு நேரம் மாற்றப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் ஒரு மணித்தியலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை