ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருகோணமலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த உத்தியோகபூர்வ விஜயம் இன்றைய தினம் (14.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கலந்துரையாடலின் போது ஊடகவியவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், ஊடகவியலாளர்கள் காணி மற்றும் வீட்டு வசதிகள் அற்று வாழ்வதாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

