யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வாங்கிய பாணுக்குள் இருந்து மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளன.
அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றைய (27) தினம் வியாழக்கிழமை, குடும்பஸ்தர் ஒருவர் பாண் வாங்கியுள்ளார்.
அந்த பாணை கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய போதே , பாண் ஒன்றினுள் மூன்று குண்டூசிகள் காணப்பட்டுள்ளன.