மட்டக்களப்பில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

மட்டக்களப்பு - கல்லடி ஆரையம்பதி போன்ற பிரதேசங்களில் பாரிய திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டடு வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (18.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கைது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வவுணதீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது அவர்களிடமிருந்து, மோட்டார் சைக்கிள்கள், சமையல் எரிவாயு சிலிண்டர், போத்தல்கள், தங்க நகை என்பன மீட்க்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி துமிந்த நயன சிறியின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையில் மேற்கொண்ட விசாரணையில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தேடப்பட்டுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை