சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயதான இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பகுதியில் இளைஞன் ஒருவர், சிறுமி ஒருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்ந்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் இன்று (16)கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், இளைஞருடன் வசித்த சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை