போரதீவுப்பற்று பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று புன்னக்குளம் கலைவாணி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பின் தங்கிய பிரதேசத்திலுள்ள புன்னக்குளம் கலைவாணி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்றியே தமது கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.

மாணவர்களின் நிலையை அறிந்து கொண்ட கோவிற்போரதீவைச்சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் சிவபாதம் மங்கையக்கரசு தம்பதிகள் தங்களது புதல்வி அனோஜியின் பிறந்தநாள் பரிசாக பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர.
புதியது பழையவை