பொலன்னறுவை அரலகங்வில குடுஓயாவிலிருந்து நீர் கொண்டு செல்லும் மதகு ஒன்றில் 7 மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெஹெரகல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
நேற்று காலை யானைக் கூட்டத்துடன் வயலில் சுற்றித் திரிந்த குட்டி யானை தவறி ஓடையில் விழுந்துள்ளது.
இந்நிலையில் பிரதேசவாசிகள் குட்டி யானையைக் காப்பாற்ற முயற்சி செய்த போதிலும், அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மதகு ஒன்றில் சிக்கிக்கொண்டுள்ளது .
இதையடுத்து பிரதேசவாசிகளால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.