விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

வவுனியா நகர்ப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்களை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நகர்ப்பகுதியில் நேற்று சோதனைகளை மேற்கொண்ட வவுனியா போதை ஒழிப்பு பொலிசார் விபசார தொழிலில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில் 3 பெண்களை கைது செய்துள்ளனர்.

செட்டிகுளம், கிளிநொச்சி, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை