நாட்டில் அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்று வீசக் கூடிய சாத்தியம்



தற்போது வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் திங்கள் செவ்வாய் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்று வீசக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.

ஆகையால் மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், தங்களுடைய கால்நடைகளை இக்காலப் பகுதிகளில் மிகவும் கவனமாக பராமரிப்பதுடன், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து அல்லது மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதியது பழையவை