இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பற்றி தங்களுடைய நிலைப்பாடுகளை மக்கள் வெளியே கொண்டுவருவதற்கான ஒரு தேர்தலே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கல்குடா தொகுதியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விழா நேற்று(28) சித்தாண்டியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையிலும் சரி வடக்கு, கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையிலும் சரி மிக முக்கிய தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, நாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் கூட்டங்களை நடாத்துகின்றோம்.