கொழும்பில் துப்பாக்கிச்சூடு!



கொழும்பு - கொட்டாஞ்சேனை ஆறாம் ஒழுங்கைப் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

உந்துருளியில் வந்தவர்களே இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்த நபரொருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தில் பதிவான கண்காணிப்பு கருவி காணொளியும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை