யாப்பாணம் - இருபாலை பகுதியில் பிறந்து பதினொரு மாதங்களேயான பச்சிளங்குழந்தையினை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மாமன் இன்று காலை கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் கோப்பாய் இருபாலை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தாயின் சகோதரர் கைது
யாழ்ப்பாண கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 11 மாதங்களான குழந்தை ஒன்றினை குறித்த குழந்தையின் தாயின் சகோதரர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக்க கூறப்படுகின்றது.
குறித்த குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் சிகப்பு அடையாளங்கள் காணப்பட்டன. இதனையடுத்த குறித்த குழந்தையின் தாயாரால் குழந்தை வைத்தியரிடம் அழைத்தது செல்லப்பட்டபோது வைத்தியர்களால் உரிய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அப் போது குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குழந்தையின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது குழந்தையின் தாயின் சகோதரன் வந்து சென்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நோயாளர் காவு வண்டியின் சாரதி
குறித்த நபர் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் நோயாளர் காவு வண்டியின் சாரதியாக கடமையாற்றி வருவதாக கூறப்படுகின்றது.
அதிவேளை சந்தேக நபர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்பட்ட நபர் எனவும் தெரிவிக்கப்படுவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிசாரை உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் சந்திர நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக்க கூறப்படுகின்றது.
அதேவேளை கலாச்சாரத்திற்கு பண்பாட்டிற்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் யுத்த காலத்தின் பின்னர் சமூக சீர் கேடான நவடிக்கைகள் , போதைப்பொருள் பாவனை, என்பன அதிகரித்து வருகின்றமை பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது.