உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிப்பு!



2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி, எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதன்படி, திட்டமிட்டபடி மார்ச் 09ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(24) வெள்ளிக்கிழமை கூடிய நிலையில், இந்த தகவல் வந்துள்ளது.
புதியது பழையவை