தேர்தலில் களமிறங்கும் போதை ஆசாமிகள்



நாட்டிலுள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளில் விண்ணப்பித்துள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகளை புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது.

இந்த தேர்தல் வேட்பாளர்களில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிள்ளைகளும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறும் என இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமைக்கு அமைய தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.


டுபாய்க்கு தப்பிச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரரான சிரான் பாசிக்கின் மகன், சிறிலங்கா சுதந்திர கட்சியின் கல்கிஸ்ச தொகுதியில் போட்டியிடத் தயாராகி வருகிறார்.

அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பண சம்பாதித்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவராவர்.


மற்றும், தென்னிலங்கை தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான ரத்கம விதுர என்பவர் பாதாள உலகக் குற்றவாளியின் பிரதான உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது.


ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் இவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இரண்டு தடவைகள் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், காலியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
புதியது பழையவை