பிரான்ஸ் தூதுவரை சந்தித்து பேசிய - நாடாளுமன்ற உறுப்பினர்கள்!



இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழரசுக் கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று(08.02.2023) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரான்ஸின் துணை தூதுவரும்,தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்
இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.


அத்துடன், எதிர்வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவிகளை எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் வழங்க முடியும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதியது பழையவை