கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரத கழிவறையிலிருந்து பச்சிளம் குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (10) இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து புகையிரத நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.