வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி விபத்து!



யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இன்று (13)அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி அதிகாலை இறைச்சி கோழிகளை ஏற்றியவாறு பயணித்த குறித்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென காற்று போனதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் அருகே உள்ள டயர் கடை மற்றும் தேங்காய் விற்பனை செய்யும் கடை மற்றும் மதில்சுவர்கள் என்பவற்றை மோதித் தள்ளியுள்ளதுடன், பாரவூர்தியும் முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்தினால் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவர் கைகள் மற்றும் தலைகளில் காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கடையினுள் புகுந்த வாகனத்தினை பிரதேசவாசிகள் வெளியே எடுத்துள்ளனர்.


இந்த விபத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



புதியது பழையவை