மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசெயலக சமுர்த்தி பிரிவின் வர்த்தகக்கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக பழுகாமம்,மண்டூர்,வெல்லாவெளி சமுர்த்தி வங்கி  பிரிவின் ஏற்பாட்டில் ,சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை சந்தையும் ஆரம்பித்து நேற்று(10-04-2023) வைக்கப்பட்டது.

சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி பிரதம அதிதியாக கலந்து கொண்டு,விற்பனை சந்தையினை திறந்து வைத்தார்.


சமுர்த்தி பயனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு இரு தினங்கள் (10-04-2023-11-04-2023)இன்று வரை விற்பனை செய்யப்பட்டது.

வர்த்தகக்கண்காட்சியில் உதவிப்பிரதேச செயலாளர் , திட்டமிடல் பணிப்பாளர்  ,கணக்காளர் போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன் நிருவாக உத்தியோகத்தர் பொதுச்சுகாதார பரிசோதகர் கு.குபேரன்,கலாச்சார உத்தியோகஸ்தர் ஆ.பிரபாகரன் கிராம உத்தியோகஸ்தர் சமுர்த்தி உத்தியோகஸ்தர் பொதுமக்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.






புதியது பழையவை