உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பு!



உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க இன்றைய தினம் (11.04.2023) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், கடந்த மார்ச் 9ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், இரண்டாவது தடவையாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

எனினும், தேர்தலுக்கு தேவையான நிதி கிடைப்பதற்கான உறுதியான திகதி அல்லது தேர்தல் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றின் தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் புதிய திகதியொன்று தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை