பல காதல் ஜோடிகள் பொலிஸாரால் கைது!


பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையை அடுத்து புதர்கள், பாறைகள், கடற்கரை மரங்களின் உள்ளே இருந்து பல காதல் ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்தனர்.

களுத்துறை கடற்கரை மற்றும் கடற்கரை மரங்களின் உள்ளே இருந்த  24  காதலர்கள்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



களுத்துறை பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.



களுகங்கைக்கு அண்மித்த கடற்கரையில் உள்ள பாறைகளுக்கு இடையில் மற்றும் மரப்  புதர்களுக்கு இடையில் இருந்து கைது செய்யபட்ட அவர்கள்  பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.



இவ்வாறு தங்கியிருப்பது பல்வேறு குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் என கடும் எச்சரிக்கையுடன் இந்த இளைஞர், யுவதிகள் குழு விடுவிக்கப்பட்டது.
புதியது பழையவை