கொழும்பில் துப்பாக்கிசூடு!



கொழும்பு துறைமுகம் ஊடாக செல்லும் அதிவேக நெடுஞ்சாலையில் பெறுமதியான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் அத்துமீறி நுழைந்த 08 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவத்தில் 04 பெண்கள் உட்பட 08 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.


இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் புளூமெண்டல் பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கொழும்பு துறைமுகத்தின் 06வது வாயிலுக்கு அருகில் உள்ள துறைமுகத்தில் இரும்பு திருட வந்த இருவரிடம் விசாரணை நடத்தியபோது அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது பாதுகாப்பு உத்தியோகத்தரிடமிருந்து நபரொருவர் துப்பாக்கியைப் பறிக்கச்சென்ற நிலையில் மற்றுமொரு பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புதியது பழையவை