திருகோணமலை- பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் கர்ப்பிணித் தாயொருவர் வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி (12-05-2023) உயிரிழந்துள்ளார்.
விசேட பெண் வைத்திய நிபுணர் குறித்த நாளில் வருகைதராமையால் மிகவும் ஆபத்தான முறையில் குழந்தையினை பிரசவித்ததன் பின்னர் அதீத குருதிப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தையும் தாயும் திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
