கதிர்காம பாதை யாத்திரை சென்ற பெண்ணொருவர் யானை தாக்கியதில் உயிரிழப்பு!



கதிர்காமத்துக்கான பாதை யாத்திரை சென்ற பெண்ணொருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி நேற்றையதினம் (13 -06-2023)  உயிரிழந்துள்ளார்.


குறித்த பெண் கதிர்காமத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்த கிணற்று பகுதிக்கு சென்றபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 63 வயதுடைய மட்டக்களப்பை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர் .

இதேவேளை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை