உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றில் பிரேரணை!



உள்ளூராட்சித் தேர்தலை அறிவிக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு தனது சிறப்புரிமைகளை மீறியிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த யோசனையை முன்வைத்த போதிலும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. 

இந்த பிரேரணை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
புதியது பழையவை