இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் தப்பியவர்களை சந்தித்தார் கனடா பிரதமர்



இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தில் தப்பியவர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து அவர்களின் உணர்வுகளை கேட்டறிந்தார்.

இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



மனதை நெகிழவைக்கும் காலை, கறுப்பு ஜூலையின் பயங்கரமான வன்முறைகளில் இருந்து உயிர்தப்பியவர்களின் கதைகளை செவிமடுத்தேன் என கனடா பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கதைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி உங்கள் வலிமை உங்களின் நம்பிக்கை மீண்டும் எழும் திறன் ஆகியவற்றை ஒருபோதும் நான் மறக்கமாட்டேன் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

புதியது பழையவை