கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை!



பொலன்னறுவை பேருந்து விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்து, மன்னம்பிட்டிய பகுதியில் நேற்று (09.07.2023) விபத்திற்குள்ளாகியுள்ளதுடன், இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பயணிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். 

சிகிச்சையை விரைவுபடுத்துமாறு தெரிவிப்பு
மேலும், விபத்துக்குள்ளானவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறு தெரிவித்துள்ளார்.


விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை